Skip to main content

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி, பேரறிவாளனுக்கு ஒரு நீதி: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்...

Published on 16/05/2019 | Edited on 16/05/2019

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

 

rti states sanjay dutt released by maharashtra government without the concern of central government

 

 

இந்நிலையில் சிறை தண்டனை முடிவதற்குள்ளாகவே நடிகர் சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புதிய தகவல் கிடைத்துள்ளதாக பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதங்கள் வைத்திருந்ததாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் அவரது தண்டனை 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

அதன்பிறகும் அவர் தண்டனை காலம் முடியும் முன்னரே விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் அப்படி விடுவிக்கப்பட்டதுக்காக மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு எந்த அனுமதியும் கேட்கவில்லை என தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் சஞ்சய் தத்தை விடுவிக்கும் முடிவை மாநில அரசே எடுத்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளிக்கப்பட்ட மனுவிற்கு கொடுக்கப்பட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சஞ்சய் தத் விவகாரத்தில் மாநில அரசு கொடுத்த நீதி ஏன் இந்த வழக்கில் கிடைக்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாந்தன் மரணம்; கலங்கி கண்ணீர் சிந்திய நளினி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சாந்தன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், சாந்தனும் விடுதலை பெற்றிருந்தார். தொடர்ந்து அவர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு,  மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், சீமான், நளினி, பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்டவர்கள்  அஞ்சலி செலுத்தினார்கள்.
 

Next Story

சாந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பேரறிவாளன் (படங்கள்)

Published on 28/02/2024 | Edited on 28/02/2024

 

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான, சாந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (28-02-24) அதிகாலை மரணம் அடைந்தார். அவரது உடலைக் காண நளினி, பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்