Advertisment

முஸ்லிம்கள் அப்துல்கலாம் போல் இருக்க வேண்டும், அஜ்மல் கசாப் போல அல்ல! அமீர்கான் ஒரு துரோகி; பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் பேச்சு...

ghtyghtg

Advertisment

முஸ்லிம்கள் அப்துல்கலாம் போல் இருக்க வேண்டும், மாறாக அஜ்மல் கசாப் போல இருக்க கூடாது என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் பேசியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பொது கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் பசுவதை தொடர்பாக பாஜக வை விமர்சனம் செய்த பாலிவுட் நடிகர் நஸ்ருதீன்ஷா மற்றும் ஆமிர்கானையும் விமர்சித்துள்ளார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், 'பிரபல நடிகர்கள் நஸ்ருதீன்ஷா மற்றும் ஆமிர்கான் இருவரும் சிறந்த நடிகர்களாக இருக்கலாம். ஆனால் சமூக ரீதியாக அவர்கள் மரியாதைக்கு தகுதியில்லாத துரோகிகள் ஆவார்கள். அதுபோல இஸ்லாமியர்கள் எப்போதும் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் போல் இருக்க வேண்டும், மாறாக அஜ்மல் கசாப் போல இருக்க கூடாது. அப்துல்கலாம் போன்றவர்களே நம் நாட்டிற்கு தேவை. மேலும் ராமர் கோவில் கட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி மற்றும் சில மத அமைப்புகளும், நீதிபதிகளும் தடையாக உள்ளனர்' என கூறினார்.

ajmal kasab Abdulkalam amirkhan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe