ADVERTISEMENT

மலேசியா, டோங்கோ நாடுகளில்  உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய மாநிலங்களவை!

12:02 PM Feb 02, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்தநிலையில் இன்று காலை மாநிலங்களவை கூடியது.

மாநிலங்களவை கூடியதும், அவையின் உறுப்பினர்கள் மலேசியா வெள்ளத்திலும், டோங்கோ எரிமலை வெடிப்பிலும் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர் வழக்கமான அவை நடவடிக்கைகள் தொடங்கின.

நாடாளுமன்றத்தின் மக்களவை இன்று மாலை கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது. கரோனா பரவல் காரணமாக, மக்களவை இந்த கூட்டத்தொடர் முழுவதும் மாலையிலேயே கூடுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT