Skip to main content

குஜராத்தில் மட்டும் ரூ. 30,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது - பிர்லா

Published on 19/01/2019 | Edited on 19/01/2019

 

 

bb

 

குஜராத்தில் நடைபெற்ற உலக முத்லீட்டாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்களம் பிர்லா, அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில் ஆதித்யா பிர்லா குழுமம் ரூ. 15 ஆயிரம் கோடியை முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் ஆலையின் விரிவாக்கம் மற்றும் புதிய ஆலைகள் தொடங்குவது போன்றவற்றில் இந்த முதலீடானது இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை பிர்லா குழுமம், குஜராத்தில் மட்டும் ரூ. 30,000 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃப்ளிப்கார்ட் 8 அடின்னா அமேசான் 16 அடி... பின்னிருந்து ஆட்டும் அமெரிக்கா நிறுவனங்கள்!!!

Published on 20/09/2018 | Edited on 20/09/2018

 

amazon


அமெரிக்கா ஆன்லைன் வர்த்தக ஜாம்பவானான அமேசானும் இந்திய நிறுவனமான சமரா  கேபிட்டலும் இணைந்து ஆதித்யா பிரில்லா குழுமத்தின் சில்லறை வர்த்தகப் பிரிவை 42 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கப்போவதாக அறிவிப்பு வந்துள்ளது. இதில் 51% பங்குகளை சமரா  நிறுவனமும் மீதமுள்ள பங்குகளை அமேசான் நிறுவனமும் வைத்திருக்கும் என்று அறிவிப்பும் வந்துள்ளது. தொடர்ந்து வால்மார்ட் நிறுவனத்துக்கும் அமேசான் நிறுவனத்துக்கும் யார் சந்தையில் முதல் இடம் என்ற போட்டி நிலவி வருகிறது. அதன் ஒரு முக்கிய நிகழ்வாக சில மாதங்களுக்கு முன்தான் சில்லறை வர்த்தகத்தின் மாபெரும் நிறுவனமான வால்மார்ட் இந்திய ஆன்லைன் நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டை 16 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கையகப்படுத்தியது. இந்த நிலையில் ஆதித்யா குழுமத்தின் சில்லறை பிரிவை அமேசான் காயகப்படுத்தப் போவதாவாக அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.