fggfhgfh

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை சார்பில் தொடரப்பட்ட பணமோசடி வழக்கு நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு மற்றும் பெட்ரோலிய துறை ஒப்பந்தங்களில் பணம் பெற்றது,19 லட்சம் பவுண்ட் செலவில் அவர் லண்டனில் வீடு வாங்கியது தொடர்பான இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு முன் ஜாமீன் வழங்கி பாட்டியாலா நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில் ஆஜராகி வந்தார் வதேரா. இந்நிலையில் தற்போது வரும் மார்ச் 2-ம் தேதி வரை அவரின் முன்ஜாமின் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 2-ம் தேதி வரை வதேராவை கைது செய்ய தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

Advertisment