ADVERTISEMENT

விபத்தில் சிக்கியது குறித்து பேசிய ரிஷப் பந்த்; ஷியாம் சர்மா விளக்கம்

06:28 PM Jan 01, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தான் விபத்தில் சிக்கியது குறித்து ரிஷப் பந்த் விளக்கம் கொடுத்ததாக டெல்லி கிரிக்கெட் அசோசியேட் டைரக்டர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் நேற்று முன்தினம் தனது தாயினை பார்ப்பதற்காக காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையாக காயமடைந்த பந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “பந்த் சாலையில் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாகச் செல்லவில்லை. அவர் மது அருந்திவிட்டும் வாகனத்தை இயக்கவில்லை. அவர் மது அருந்தி இருந்தால் டெல்லியில் இருந்து வாகனத்தை இயக்கிக் கொண்டு வந்திருக்க முடியாது. பந்த் குடிக்கவில்லை என்பதை டெல்லியில் இருந்து விபத்து நடந்த இடம் வரை இருக்கும் சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கின்றன” எனக் கூறினார்.

மேலும் ரிஷப் பந்த்தினை மருத்துவமனையில் நேரடியாக சந்தித்துப் பேசிய டெல்லி கிரிக்கெட் அசோசியேட் டைரக்டர் ஷியாம் சர்மா அவர் குறித்து தகவல்களைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பந்த் குணமாகி வருகிறார். பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற வைக்க ஏற்பாடு செய்து வருகிறது என்றும் சாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்டபோது தான் விபத்து ஏற்பட்டது என ரிஷாப் பந்த் கூறியதாகவும் ஷியாம் சர்மா கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT