ADVERTISEMENT

“முன்பதிவு கட்டணத்தை திரும்பத் தருக''-விமான சேவை நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு 

06:04 PM Apr 16, 2020 | kalaimohan

கரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக, இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலுக்கு கொண்டுவரப்பட்டு, உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகள் முன்பதிவு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு மத்திய விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மார்ச் 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட தொகையை திரும்ப செலுத்த வேண்டும் என இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT