மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துங்கள்... -மத்திய உள்துறை அறிவுறுத்தல்

Restrict People's Movement - Central govt Instruction

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஐந்தாம் கட்ட பொது ஊரடங்குஅமலில் உள்ளது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையில்உலக அளவில் இந்தியா நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது.இந்தியாவில் 2.97 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது இந்தியா உலகளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு சார்பில், மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின்தலைமைசெயலாளருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.அதன்படி, இரவு 9 மணி முதல் காலை5 மணி வரை மக்கள் நடமாட்டத்தை மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும். அவசர தேவைக்கு செல்வோர், பேருந்துகள், லாரிகள் போன்றவை தவிர பிற வாகனங்களில் நடமாடும் மக்கள் கூட்டத்தைஅந்தந்த மாநிலங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என அந்த அறிவுறுத்தலில்கூறப்பட்டுள்ளது.

உலகளவில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Central Government corona virus India
இதையும் படியுங்கள்
Subscribe