புதுச்சேரி மாநிலத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை நிறைவேற்றுவதற்கும் அனுமதிக்க மாட்டோம்என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்து வந்தநிலையில் புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைஎதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதேபோல்தேசியகுடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தஎதிர்ப்பு தெரிவித்தும்தீர்மானம் நிறைவேறியது.

Advertisment

Resolution against the Citizenship Bill  in puducherry

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ் என5 மாநிலங்கள்குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவைஎதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் தற்போது புதுச்சேரியிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதவைஎதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்காலைபாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாகஅறிவிக்க கோரியும்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.