கடந்த ஜூன்- 6 ஆம் தேதி மும்பையில் ரிசர்வ் வங்கியின் (RBI) உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் RTGS, NEFT பண பரிவர்த்தனைக் கட்டணங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவிப்பை வெளியீட்டு இருந்தது. தற்போது அதை உறுதி செய்யும் விதமாக ரிசர்வ் வங்கி ஜூலை 1 முதல் RTGS, NEFT கட்டணத்தை வங்கிகள் குறைக்கும் என்று அறிவித்துள்ளது. ஆனால் RTGS, NEFT கட்டணங்கள் எவ்வளவு குறையும் என்பது குறித்த விவரங்களை ரிசர்வ் வங்கி வெளியிடவில்லை.

Advertisment

RESERVE BANK OF INDIA

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள இந்த கட்டணக் குறைப்பால் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ஜூலை 1 முதல் RTGS, NEFT ஆன்லைன் பண பரிவர்த்தனை கட்டணங்களை குறைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வங்கி (SBI BANK) NEFT பரிவர்த்தனை செய்ய 1 முதல் 5 ரூபாய் வரையிலும், RTGS பரிவர்த்தனை செய்ய 5 முதல் 50 ரூபாய் வரையிலும் கட்டணமாக வசூலிக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கட்டணக்குறைப்பால் நாடு முழுவதும் உள்ள பல கோடி மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment