Skip to main content

மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் வழங்கும் ரிசர்வ் வங்கி... காரணம்..?

Published on 27/08/2019 | Edited on 27/08/2019

ரிசர்வ் வங்கியின் உபரிநிதியில் இருந்து ஒரு லட்சத்து 76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

reserve bank gives fund to central government

 

 

சில மாதங்களுக்கு முன்பு ரிசர்வ் வாங்கி உபரி தொகையை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. மத்திய அரசின் இந்த கோரிக்கையால் எழுந்த சர்ச்சைக்கு பிறகு அப்போதைய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவும் செய்தார். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி எவ்வளவு உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்கலாம் என்பது குறித்து முடிவு செய்வதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் குழு ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதித்ததுறை செயலர் ராஜீவ்குமார், ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்கள் ராகேஷ் மோகன், விஷ்வநாதன், பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் சுபாஷ் சந்திர கார்க், ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் பாரத் ஜோஷி மற்றும் சுதிர் மன்கட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த 14-ம் தேதி ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்த நிலையில், அந்த அறிக்கை குறித்து முடிவு செய்வதற்காக ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு கூட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 2018-19-ம் நிதியாண்டின் உபரி நிதியிலிருந்து 1,76,000 கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வழக்கை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்கவும், பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், பொருளாதார நெருக்கடி காலங்களில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காகவும், உபரிநிதியை ஒரு நாட்டின் மத்திய வங்கிகள் கையிருப்பாக வைத்திருப்பது வழக்கம். ஒவ்வொரு நாட்டிலும் இந்த உபரி தொகைதான் பொருளாதார சமநிலைக்கான முக்கிய காரணியாக திகழ்கிறது. அப்படி இருக்கும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் 14 சதவீதம் மட்டுமே உபரி நிதியை இருப்பு வைத்துள்ளதாகவும், ஆனால் இந்தியாவிடம் 28 சதவீதம் உபரி நிதி கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உபரி நிதி அதிகமாக இருப்பதால் அதனை மத்திய அரசுக்கு கொடுப்பதற்கு ரிசர்வ் வாங்கி இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.