taliban

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள்தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன.

Advertisment

இந்தியாவும் இராணுவவிமானங்கள் மூலம் காபூல்விமான நிலையத்திலிருந்து, இந்தியர்களை மீட்டு தாய்நாட்டிற்கு அழைத்துவருகிறது. இந்தநிலையில்காபூல்விமான நிலையத்திற்கு அருகே 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

அதேநேரத்தில் எதிலாட்ரோஸ் என்ற ஊடகத்திடம் பேசியுள்ள தலிபான் செய்தி தொடர்பாளர்அஹ்மதுல்லா வசேக், 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியாகதகவலைமறுத்துள்ளார்.