இயற்கை பேரிடர் பாதித்த கேரளா, நாகலாந்து, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரணங்கள் அறிவித்துள்ளது. வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு 3048 கோடி, நாகலாந்து நிலச்சரிவிற்கு 131 கோடி, புயல் பாதித்த ஆந்திரா மாநிலத்திற்கு 539 கோடியும் கூடுதல் நிவாரணமாக அறிவித்துள்ளது. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் கஜா புயலுக்கான நிவாரணம் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்ட கேரளா,நாகலாந்து, ஆந்திராவிற்கு 3718 கோடி கூடுதல் நிதி- மத்திய அரசு
Advertisment
Advertisment