Skip to main content

தமிழில் அர்ச்சனை செய்ய மறுப்பு! தாங்களாகவே மந்திரம் ஓதிய தெய்வத்தமிழ்ப் பேரவையினர்! 

Published on 06/01/2022 | Edited on 06/01/2022

 

Refusal to worship in Tamil! The Theivathamil people who recited the mantra themselves!

 

புதுச்சேரி கோவில்களில் தமிழில் அர்ச்சனை, குடமுழுக்கு செய்ய வேண்டும், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ‘தெய்வத் தமிழ்ப் பேரவை’ சார்பாக தொடர்ச்சியாக பரப்புரை செய்து வருகின்றனர். அதனையொட்டி காராமணிக்குப்பத்தில் அமைந்துள்ள சுந்தர விநாயகர்,  சுப்பிரமணியர் ஆலயத்தில் தமிழில் அர்ச்சனை செய்யக் கேட்டனர். ஆனால் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்ய மறுத்துவிட்டனர். அதையடுத்து சிவனடியார்களும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரும் முருகன் போற்றி மந்திரங்களை சொல்லச் சொல்ல பொதுமக்களும் பின்தொடர்ந்து பெருங்குரலெடுத்து போற்றி மந்திரங்களை கூறியதைக் கேட்டு பக்தர்கள் பரவசத்தோடு முருகனை வணங்கினர்.

 


இதுகுறித்து தெய்வத்தமிழ்ப் பேரவையினர் கூறுகையில், "தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய சொல்லி கேட்கின்றவர்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படுகிறது. அதைப்போல புதுச்சேரியிலும் எங்களுக்கு தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவித்தோம். அதுமட்டுமின்றி, காந்தி வீதி வேதபுரீஸ்வரர் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனை கேட்கின்றவர்களுக்கு தமிழில் அர்ச்சனை நடைபெறுகிறது என்று நாங்கள் சொல்லியும் மறுத்து விட்டார்கள்.

 

Refusal to worship in Tamil! The Theivathamil people who recited the mantra themselves!

 

அதன்பிறகு சிவனடியார்களும், தெய்வத் தமிழ்ப் பேரவையினரும், முருகன் போற்றி மந்திரங்களை சொல்லச் சொல்ல பொதுமக்களும் பின்தொடர்ந்து பெருங்குரலெடுத்து போற்றி மந்திரங்களை கூறியதைக் கேட்டு பக்தர்கள் பரவசத்தோடு முருகனை வணங்கியது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. தமிழ்நாடு அரசு போல புதுச்சேரி அரசும் தமிழில் அர்ச்சனை செய்வதற்கும், குடமுழுக்கு செய்வதற்கும் உரிய அரசாணை வெளியிட வேண்டும். அதை கோவில்களில் பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க வேண்டும். இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளை வைத்து தமிழ் வழிபாட்டை உறுதிப்படுத்த வேண்டும்" என்றனர். 

 

Refusal to worship in Tamil! The Theivathamil people who recited the mantra themselves!

 

மேலும், ‘தமிழர்கள் கோவில்களுக்கு செல்லும்பொழுது தமிழில் அர்ச்சனை செய்யுங்கள்’ என கேட்க வேண்டும் என்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பாக பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாசு சந்திரபோசு தலைமை தாங்கினார். தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் விசயகணபதி, சிவனடியார்கள் சிவசங்கரன், இராசாராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் தமிழ்த்தேசிய பேரியக்க புதுச்சேரி செயலாளர் இரா.வேல்சாமி,  நாம் தமிழர் தொழிலாளர் நலச் சங்கம் இரமேஷ், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, தமிழன்பன், அசோக் ராசு, பாகூர் அன்பு நிலவன், மகளிர் ஆயம் சத்தியா, செல்வி, புவனா,பிரியா உள்ளிட்டவர்களும், பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெயிலின் தாக்கம்; திண்டல் கோவிலில் தரைவிரிப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Sun exposure; Carpet in Dindal temple

கோடை காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. நீர்சத்து  குறைபாட்டை தடுப்பதற்காக ஒவ்வொரு சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல்களை ஆயத்தமாக வைத்திருக்கும் படி தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்கி பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் பலரும் சுற்றுலா தளங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோட்டில் திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில், பக்தர்கள் பாதகங்களை வெயிலில் இருந்து காக்கும் வகையில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதங்களை பாதுகாப்பதற்காக, திண்டல் வேலாயுதசுவாமி கோவில் வளாகத்தில், 1.20 லட்சம் ரூபாய் மதிப்பில், தென்னை நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில்லாமல் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது. கோவில் வளாகத்தில் ஆங்காங்கே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.