Advertisment

பெட்ரோல் விலை உயர்வு; வரியை குறையுங்கள் - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்!

sakthikantha das

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்தது. அஸ்ஸாம், நாகலாந்து, மேகாலயாஉள்ளிட்ட சிலமாநிலங்கள், பெட்ரோல்மீதான வரியைக் குறித்துபெட்ரோல் - டீசல் விலையை சிறிதளவு குறைத்துள்ளனர். இருப்பினும் இந்தியா முழுவதும் பெட்ரோல்விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரியைரத்து செய்ய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைவிடுத்து வருகின்றன.

Advertisment

இந்தநிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்தலைமையில் நாணயக் கொள்கை குழு கூட்டம்நடைபெற்றது. அக்கூட்டம் தொடர்பான குறிப்புகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அந்தக் குறிப்புகளின்படி பெட்ரோல், டீசல்விலையைக் கட்டுப்படுத்தமத்திய, மாநில அரசுகள் அவற்றின் மீது விதிக்கப்படும் மறைமுக வரியைக் குறைக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Advertisment

நாணயக் கொள்கை குழு கூட்டத்தின் குறிப்புப்படி, "விலை உயா்வால் பொருளாதாரத்தில் ஏற்படும் அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க, செயல்திறன் மிக்க விநியோகச் செயல்பாடுகள், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மறைமுக வரிகளை மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த முறையில் படிப்படியாகக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியம்" எனஅவர் கூறியுள்ளார்.

petrol Diesel petrol price hike sakthi kantha das
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe