கடந்த வாரங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
மேலும் தற்போது வரை பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவின் வடக்கு பகுதி மழையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சமீபத்தில் மஹாராஷ்ட்ராவிலிருந்து அணை திறந்துவிடப்பட்டது மேலும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த நிலையில் கேரளா மற்றும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் அதிக மழை பெய்யலாம் என கூறி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கும், கர்நாடகாவின் குடகு மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.