Skip to main content

சர்ச்சைகளால் குறையும் ரேட்டிங்... இந்தியாவில் டிக்டாக் எதிர்ப்பை அதிகரித்த ஒற்றை வீடியோ...

Published on 19/05/2020 | Edited on 19/05/2020

 

aa

 

டிக்டாக் தளத்தில் பிரபலமான வட இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்ட வீடியோ ஆசிட் வீச்சை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக நேற்று சர்ச்சை எழுந்த நிலையில், டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
 


பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆபாசமான உள்ளடக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்தியாவில் டிக்டாக் செயலியைத் தடைசெய்ய வேண்டும் என நீண்ட காலமாகக் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தச் சூழலில், பிரபல யூ - ட்யூபரான கரிமினாட்டி அண்மையில் வெளியிட்ட டிக்டாக் ரோஸ்ட் வீடியோ இணையத்தில் வைரலானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டிக்டாக் பிரபலங்கள் பலரும் வீடியோ வெளியிட்டார். ஒருகட்டத்தில் இது ரசிகர்களின் சண்டையாகவும் தற்போது மாறியுள்ளது.

இந்தச் சூழலில், 1.34 கோடி ஃபாலோயர்களைக் கொண்ட ஃபைஸல் சித்திக் என்ற டிக்டாக் பிரபலம் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்று டிக்டாக் மீதான வெகுஜனத்தின் வெறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. எனலாம். அந்த நபர் வெளியிட்ட வீடியோவில், ஒரு பெண்ணின் மீது ஆசிட் அடிப்பது போலவும், அதன் பிறகு அந்தப் பெண்ணின் முகம் எப்படிச் சிதைந்துள்ளது என்பதைக் காட்டும் விதமாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த வீடியோ நேற்று முதல் மிகப்பெரிய சர்ச்சையானது. ஆனால், குறிப்பிட்ட அந்தப் பெண்ணின் ஒப்பனைத் திறமையைக் காட்டவே இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக ஃபைஸல் சித்திக் கூறியுள்ளார்.
 

 


இருப்பினும் இந்த விஷயம் தற்போது பூதாகரமாக மாறியுள்ளது. ஒருபுறம் மகளிர் அமைப்புகள் இந்த வீடியோ தொடர்பாகப் புகாரளித்து வரும் நிலையில், மற்றொரு புறம், கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள டிக்டாக் செயலியின் ரேட்டிங்கைக் குறைத்து தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள் இளைஞர்கள். 4.5 ஸ்டார் ரேட்டிங்குடன் இருந்த டிக்டாக் செயலி தற்போது இரண்டே நாட்களில் 2 ஸ்டார் ரேட்டிங் உள்ள செயலியாக மாறியுள்ளது. மேலும் இந்தியாவில் டிக்டாக் செயலியைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரமேஷ் மரணம் கொலையா? தற்கொலையா? - இரு விதமாகச் சொல்லும் மனைவிகள் 

Published on 28/01/2023 | Edited on 31/01/2023

 

Police investigation on dancer Ramesh's case

 

டிக்டாக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபல நடிகர்களைப் போல் நடனமாடி மக்களைக் கவர்ந்தவர் டான்சர் ரமேஷ். 42 வயதான இவர் மூர் மார்க்கெட் பகுதியில் தனது முதல் மனைவியுடன் வசித்து வந்தார். இவரது இரண்டாம் மனைவியின் வீடு புளியந்தோப்பு கே.பி.பார்க் அருகே தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் கட்டடத்தில் உள்ளது.

 

நேற்று ரமேஷுக்கு பிறந்தநாள் என்பதால் தனது இரண்டாம் மனைவியை சந்திக்கச் சென்றுள்ளார். தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் 10 மாடிகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடியிலிருந்து ரமேஷ் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ரமேஷ் சமூக வலைத்தளம் தவிர தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டவர். இவரது தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

 

முதற்கட்ட விசாரணையில் நேற்று பிறந்தநாள் என்பதால் ரமேஷ் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவருக்கும் அவரது உறவினருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் பின்பே ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

 

ரமேஷினை தற்கொலைக்குத் தூண்டியது யார்? என்பது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது மனைவி தரப்பில் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் மனைவி தரப்பில் தனது கணவர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறினர். ரமேஷின் மரணம் குறித்து மர்மச்சாவு 174 பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

Next Story

“சில முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ரவுடிபேபி சூர்யா பின்னாடி இருக்கிறார்கள்” - பாதிக்கப்பட்ட பெண்கள் புகார்!

Published on 22/11/2021 | Edited on 22/11/2021

 

சுப்புலட்சுமி என்கிற ரவுடிபேபி சூர்யாவையும், சிக்கந்தர் என்கிற சிக்காவையும் பாலியல் வழக்கில் கைதுசெய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்களும் பொதுமக்களும் சேர்ந்து கமிஷனர் அலுவலகம் முன் திரண்டனர். ஆதாரத்துடன் வழக்குப் பதிவுசெய்து வழக்கு நிலுவையில் உள்ளதால், வழக்கை உடனடியாக எடுத்து நடத்த வேண்டும் என தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பெண் ஒருவர் கூறியதாவது, “ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தேன்.

 

நேரடியாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்குச் சென்று ஆட்சியரிடம் புகார் மனுவைக் கொடுத்தேன். அங்கிருந்து இந்த வழக்கைத் தொடர அனுமதி வழங்கினர். அதன் பின்னர் மேடவாக்கம் மவுண்ட் டிசிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர் ஏசிக்கு அனுப்பி, சைபர் கிரைம்ல விசாரிக்கச் சொன்னார்கள். சைபர் கிரைம்ல எஸ்.ஐ. பாலசுப்பிரமணியிடம் என்னிடம் இருக்கும் ஆதாரத்தைக் கொடுத்தேன். அனைத்து ஆதாரங்களையும் வாங்கிய அவர், எஃப்.ஐ.ஆர். பதிந்தாரா இல்லையா என்றே தெரியவில்லை. வழக்கு எந்த நிலையில் இருக்கிறது என கேட்க அவரை தொடர்புகொண்டால் என்னையே மிரட்டுகிறார். 14 வருடம் பணியில் இருக்கிறேன். எங்க வேணாலும் சென்று என்ன வேனாலும் செய்துகொள்ளுங்கள் என கூறுகிறார். இப்ப நான் தொடர்ந்த வழக்குக்குப் பதில் தெரியணும். ரவுடிபேபி சுப்புலட்சுமி நடிகையோ, யூடியுபரோ கிடையாது.

 

அவருடைய முழு வருமானமும் பெண்களைப் பாலியல் தொழிலுக்கு அமைத்துக்கொடுத்து டாலர்களில் சம்பாதித்துவருகிறார். சில கட்சிக்காரர்கள், முன்னாள் அமைச்சர்கள் எனப் பலரும் அவர் பின்னாடி இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் ஆதாரங்கள் இருக்கின்றன. இதை சைபர் கிரைம்ல கேட்டாங்கன்னா எல்லா ஆதாரத்தையும் கொடுப்பேன். மேலும், அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி என்னை ஃபோனில் மிரட்டுகிறார். அதனால் நீங்க சுப்புலட்சிமியை கைது செய்து விசாரணை செய்தால் எல்லா உண்மையும் வெளியேவரும். அதேபோல் அவருக்குப் பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என எல்லாம் வெட்ட வெளிப்படையாக தெரியவரும்” என தெரிவித்தார்.