உ.பி தேர்தல்;"குஜராத்தில் இருந்துதான் உண்மையான ஆச்சரியம் வரப்போகிறது" - அகிலேஷ் யாதவ்!

akhilesh yadav

உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல், மார்ச் 7 ஆம்தேதிவரைஏழு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் சவுத்ரியுடன்சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த சமாஜ்வாடிகட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப்பிரதேச தேர்தலில்எந்த ஆச்சரியமும் நிகழாது என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது; பாஜக ஏற்கனவே தோற்றுவிட்டது. மகாத்மா காந்தியின் கொலையாளிகளை கவுரவிப்பவர்களுக்கு வாக்காளர்கள் பாடம் புகட்டுவார்கள். உத்தரப்பிரதேச தேர்தல் முடிவுகள் மாநிலத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

"உத்தரப்பிரதேச மக்கள் தங்களது தீர்ப்புகளை வழங்கிவிட்டனர். இந்த தேர்தல்முடிவுகளில் எந்த ஆச்சரியமும்நிகழாது. விவசாயிகளும், இளம் வியாபாரிகளும், அனைத்து தரப்பு மக்களும் சமாஜ்வாடி கூட்டணியில்உள்ளவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என முடிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்திற்குப் பிறகு தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் இருந்துதான்உண்மையான ஆச்சரியம் வரப்போகிறது" எனத்தெரிவித்துள்ளார்.

uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe