தொலைத்தொடர்புக்கு உதவும் ஜிசாட் 6ஏஎன்ற செயற்கைக்கோளைஇஸ்ரோ தயாரித்துள்ளது. இதனை ஜி.எஸ்.எல்.விஎஃப்08 என்ற ராக்கெட் மூலம் நாளை விண்ணில் ஏவுவதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ்தாவான் ஆய்வு மையத்தின்இரண்டாவது ஏவுதளத்தில் நாளை விண்ணில் ஏவப்படுவதற்கான 27 மணிநேர கவுண்டன் இன்று பிற்பகல் 1.56 மணிக்குதொடங்கவுள்ளது.இந்திய நேரப்படி நாளை மாலை 4.56 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி எஃப் 08 விண்ணில் செலுத்தப்படவுள்ளது.