Advertisment

"ஆணிகளை நீக்காமல் டெல்லியை விட்டுச் செல்லப்போவதில்லை!" - விவசாய சங்கத்தலைவர் அறிவிப்பு!

rakesh tikait

Advertisment

வேளாண்சட்டங்கள் தொடர்பாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குடியரசு தினத்தன்றுடிராக்டர்பேரணி நடத்தியவிவசாயிகள், அதனைத்தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும்வரை வீடு திரும்பப் போவதில்லை என்றும், பேச்சுவார்த்தைக்கு எப்போதும்தயார் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயசங்கத் தலைவர் ராகேஷ்திகைத், "வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டபிறகேவீடு திரும்புதல் இருக்கும். சிங்குஎல்லை தொடர்ந்து எங்கள் அலுவலகமாக இருக்கும். மத்திய அரசு இன்று பேசுவதாக இருந்தாலும், 10 நாட்களில்பேசுவதாக இருந்தாலும், அடுத்த வருடம் பேசுவதாக இருந்தாலும் நாங்கள் தயார். டெல்லியில் உலோக ஆணிகளை நீக்காமல் டெல்லியிலிருந்து செல்லப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Delhi farm bill Farmers
இதையும் படியுங்கள்
Subscribe