Skip to main content

ரேஷன் கார்டில் இயேசு கிருஸ்து படம்... சர்ச்சையில் சிக்கிய மாநில அரசு!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019

ஆந்திராவில் கடந்த சில நாட்களாக, இயேசு கிறஸ்து படம் அச்சிடப்பட்ட ரேஷன் கார்டின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த ரேஷன் கார்டு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது. மறுபுரம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால், அவர் கிறிஸ்தவ மதத்தை ஊக்குவிக்கிறார் என்ற சர்ச்சை எழுந்தது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருப்பதியிலிருந்து திருமலை செல்லும் அரசு பஸ்சில், இயேசுவே உண்மையான கடவுள், ஜெருசலேம் செல்லும் கிறிஸ்தவர்களுக்கு அரசு உதவி என்ற விளம்பரம் அச்சடிக்கப்பட்டது வைரலாகி, ஜெகன் அரசை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் ரேஷன் கார்டில் இயேசு படம் அச்சிடப்பட்ட விவகாரத்தை அம்மாநில அரசு மறுத்துள்ளது. 
 

fg



இதுதொடர்பாக நடைபெற்ற விசாரணையில், வத்லமாறு என்ற பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், ரேஷன் கார்டில், ஏசு கிறிஸ்துவின் படத்தை அச்சிட்டு சமூக வலைதளங்களில் பரப்பியது தெரியவந்தது. இதே நபர், கடந்த 2016ம் ஆண்டில், சாய்பாபா படத்தையும், 2017 மற்றும் 2018ல் திருப்பதி வெங்கடாஜலபதி படத்தையும் ரேஷன் கார்டில் அச்சிட்டுள்ளார். இயேசுவின் புகைப்படத்தை ரேஷன் கார்டில் பதிவிட்டு, சமூக அமைதியை குலைக்கும் வகையில், சர்ச்சையை ஏற்படுத்திய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை அருகே நிலநடுக்கம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Earthquake near Chennai

சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

தடம்புரண்ட ரயில்; அலறிய பயணிகள்

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
NN

ஆந்திராவில் இரவில் பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திர மாநிலம் விஜயநகர மாவட்டம் கொத்த வலசு ரயில் நிலையப் பகுதியில் சென்று கொண்டிருந்த பயணிகள், திடீரென தடம் புரண்டது. அதன் காரணமாக ரயிலில் ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சத்தத்தால், ரயிலில் பயணம் செய்த பணிகள் அலறியடித்தனர்.

பின்னர் உடனடியாக அங்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் தடம் புரலக் காரணம் என்ன என்று விசாரித்த போது, ரயிலை ட்ராக் மாற்றிய தருணத்தில் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. லோகோபைலட் உடனடியாக சுதாரித்து ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இரவு நேரத்தில் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அங்கிருந்து கிளம்பி மாற்று வழிகளில் பேருந்துகள், ஆட்டோக்களில் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டது. ரயில்வே போலீசார், இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.