பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா வயது மூப்பு காரணமாக வழக்கமான பரிசோதனைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவரது நெருங்கிய வட்டாரங்கள் மூலம் இத்தகவல் வெளிவந்துள்ளது