தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 10:15 மணியளவில் கிடைத்த தகவலின்படி ரூ. 73.335. நேற்று இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.366 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று காலை 10:15 மணியளவில் கிடைத்த தகவலின்படி ரூ. 73.335. நேற்று இறுதியில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.366 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நான்கு முனை கூட்ரோடு பகுதியில் ஸ்டேட் பாங்குக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இரவு இங்கு கார்டு போட்டு 1000 ரூபாய் கேட்டு எண்டர் செய்தால் அது ஆறு 500 ரூபாய் நோட்டுகள் என மூன்று ஆயிரம் ரூபாய் தந்துள்ளது. இதனை அறிந்த பலர் ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து குடியாத்தம் நகர காவல்துறையினருக்கும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட ஏ.டி.எம் மையத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்தில் தற்காலிகமாக சோதனை மேற்கொண்டு ஏடிஎம் மையத்தை மூடினர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்த பொழுது, தொழில்நுட்ப கோளாறால் ஆயிரம் ரூபாய்க்கு பதில் 3 ஆயிரம் ரூபாய் வந்ததாகவும் ஒரு 500 ரூபாய் நோட்டும் ஐந்து 100 ரூபாய் நோட்டுகள் வரவேண்டியதற்கு பதிலாக ஆறு 500 ரூபாய் நோட்டுகள் வந்திருக்கலாம் எனவும், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
Next Story
யூடியூப் பார்த்து கள்ளநோட்டுகளை அச்சடித்து மார்க்கெட்டில் மாற்ற முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா மாநிலம், சித்தூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர், அந்தப் பகுதியில் டீக் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலமனேரி பகுதியில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டில் 50 ரூபாய்க்கு காய்கறி வாங்கியுள்ளார். அந்தக் கடையில் இவர் ஒரு 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அங்கு சில்லறை வாங்கிக்கொண்ட அவர், அடுத்த கடையில் சில காய்கறிகளை வாங்கிக்கொண்டு மற்றொரு 200 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார். அப்போது அந்தக் கடைக்காரர் அந்த நோட்டை வாங்கி பார்த்துவிட்டு அதில் சந்தேகம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் உடனடியாக பலமனேரி நகர காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அந்தத் தகவலையடுத்து அங்கு வந்த பலமனேரி நகர காவல் நிலைய ஆய்வாளர் சந்திரசேகர், உதவி ஆய்வாளர் சுப்பா ரெட்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தான் கொடுத்தது கள்ள நோட்டு தான் என்று ஒப்புக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், ‘கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக கள்ளநோட்டுகளை தயாரிப்பது குறித்து யூடியூப்பில் பார்த்து தெரிந்துகொண்டேன். அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் பெங்களூரு சென்று ஒரு பிரிண்டர் வாங்கிவந்து வீட்டிலேயே கள்ளநோட்டுகளை தயார் செய்தேன். பிறகு அதனை புழக்கத்தில் விட சந்தைகளில் அந்த நோட்டுகளைக் கொண்டு பொருள்கள் வாங்கினேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
பிறகு காவல்துறையினர் அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டிற்கு சென்று அங்கு கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்திய பிரிண்டர் மற்றும் கள்ள நோட்டு தயாரிப்புக்கு உதவிய மற்ற பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர் வீட்டில் தயாரித்து வைத்திருந்த கள்ளநோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.