ADVERTISEMENT

முத்தலாக் தடை செய்யும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

09:57 PM Sep 19, 2018 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முத்தலாக் தடை செய்யும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

மக்களவையில் முத்தலாக் தடை சட்டம் மசோதா நிறைவேற்றப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவையில், முத்தலாக் தடை சட்டத்திற்கு அவசரச்சட்டம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது. முத்தலாக் தடை சட்டத்தில் போதிய திருத்தங்கள் செய்து அவசரச்சட்டமாக வெளியிட ஒப்புதல் பெறப்பட்டது.

திருத்தங்கள்...

முத்தலாக் வழங்கியபின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம்.

முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க திருத்தம்.

முத்தலாக் தடை சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறலாம் என திருத்தம்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த முத்தலாக் தடை செய்யும் மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT