rajiv kumar Takes Over As New Election Commissioner

Advertisment

இந்திய தேர்தல் ஆணையராக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் குமார் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக் லவாசா கடந்த 2018 ஜனவரி 23-ஆம் தேதி தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் 2022 அக்டோபரில் முடிவடைய உள்ள நிலையில், அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிலிப்பைன்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆசிய மேம்பாட்டு வங்கியின் (ஏ.டி.பி.) துணை தலைவராக அசோக் லவாசா அண்மையில் தேர்வு செய்யப்பட்டதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisment

இந்நிலையில், ஜார்க்கண்ட் கேடர்- 1984 பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரியான ராஜீவ் குமாரைத் தேர்தல் ஆணையராக நியமித்தார் குடியரசு தலைவர். இந்நிலையில், இன்று அவர் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். நிதித்துறை செயலராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜீவ் குமார், பேங்க் ஆஃப் பரோடா, விஜயா, தேனா வங்கிகளை ஒன்றாக இணைப்பதில் முக்கிய பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.