ADVERTISEMENT

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்! 

11:07 PM May 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திராவின் பதவிக் காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், ராஜீவ் குமார் இந்தியாவின் 25- வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று (15/05/2022) பொறுப்பேற்றுக் கொண்டார்.

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், குடியரசுத்தலைவர் தேர்தல், துணை குடியரசுத்தலைவர் தேர்தல், பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT