இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்! 

Rajiv Kumar takes over as Chief Election Commissioner of India

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த சுஷில் சந்திராவின் பதவிக் காலம் முடிவடைந்திருக்கும் நிலையில், ராஜீவ் குமார் இந்தியாவின் 25- வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் இன்று (15/05/2022) பொறுப்பேற்றுக் கொண்டார்.

2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், குடியரசுத்தலைவர் தேர்தல், துணை குடியரசுத்தலைவர் தேர்தல், பல்வேறு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi
இதையும் படியுங்கள்
Subscribe