Skip to main content

‘இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்’ - ராஜஸ்தான் காவல்துறைக்கு புதிய உத்தரவு

Published on 14/06/2025 | Edited on 14/06/2025

 

Rajasthan Police New order  Use Hindi words instead urdu

ராஜஸ்தான் மாநில காவல்துறைக்கு அதிகாரப்பூர்வ ஆவணங்களில் உருது மற்றும் பாரசீக சொற்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இந்தி அல்லது ஆங்கில மாற்றும் மொழிகளைப் பயன்படுத்துமாறு மாநில இணையமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 

ராஜஸ்தான் மாநிலத்தில், ஸ்ரீ பஜன்லால் ஷர்மா தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அமைச்சரவையில் இணையமைச்சராக பொறுப்பு வகித்து வரும் ஜவஹர் சிங் பெதம், காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘முகலாய காலம் முதல் காவல்துறையில் உருது மற்றும் பாரசீக சொற்கள் வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போதைய தலைமுறை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இந்த மொழிகளில் பரிச்சயம் இல்லை. காவல்துறை ஊழியர்கள், புகார்தாரர்கள் மற்றும் பொதுமக்களிடையே உருது அல்லது பாரசீக மொழி அறிவு இல்லாததால், இந்த வார்த்தைகள் பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன. மேலும், தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றன, இதனால் நீதி தாமதமாகிறது. 

இந்தியாவில் அனைத்து மொழிகளும் மதிக்கப்படும் அதே வேளையில், ராஜஸ்தான் முதன்மையாக இந்தி பேசும் மாநிலமாக இருப்பதால் நிர்வாக மொழியில் இந்திக்கு முன்னுரிமை அளிப்பது சட்ட ஆவணங்கள், அரசு உத்தரவுகள் மற்றும் காவல்துறை பதிவுகளை அணுகுவதை மேம்படுத்தும். எனவே, அதிகாரப்பூர்வ காவல் ஆவணங்கள், அறிக்கைகள், அறிவிப்பு பலகைகள் மற்றும் தகவல்தொடர்புகளில் தற்போது பயன்படுத்தப்படும் உருது மற்றும் பாரசீக சொற்களை மறுபரிசீலனை செய்து இந்தி சொற்களுடன் மாற்றுவதற்கான செயல்முறையைத் தொடங்க வேண்டும். இந்தி வார்த்தைகளைப் பயன்படுத்துவதன் மூலம், குடிமக்கள் அரசாங்க அறிவிப்புகள், உத்தரவுகள் மற்றும் திட்டங்களைப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும். இது காவல் நிர்வாகத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே சிறந்த தொடர்பை ஏற்படுத்த உதவும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்