Skip to main content

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் தேர்வு; காங்கிரஸ் கட்சி அதிகாரபூர்வ அறிவிப்பு

Published on 14/12/2018 | Edited on 14/12/2018

 

sac

 

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பிடித்து பெரும்பான்மையை பெற்றது காங்கிரஸ் கட்சி. முதல்வர் பதவிக்கு சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் இடையே போட்டி நிலவி வந்தது. இதனால் முதல்வர் யார் என்பதை ராகுல் காந்தியே முடிவு செய்வார் என ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தனர். அதன்படி இன்று காங்கிரஸ் கட்சி இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி அசோக் கெலாட் முதல்வராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்