Skip to main content

சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கொடூரமாய் சிதைக்கப்பட்ட உடல்..! 

Published on 07/08/2023 | Edited on 07/08/2023

 

Rajasthan Bhilwara girl child issue

 

ராஜஸ்தான் மாநிலம், பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த வாரம் புதன்கிழமை அந்தப் பகுதியில் உள்ள இடத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்படி சென்ற அவர், இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது பெற்றோர், சிறுமி எப்போதும் செல்லும் இடங்களில் எல்லாம் தேடிச் சென்றுள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால், கோத்ரா போலீஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். 

 

இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி, பில்வாரா பகுதியில் இயங்கி வரும் நிலக்கரி உலை ஒன்றில் ஒரு பெண் உடல் பாதி எரிந்த நிலையில் இருப்பதாக கோத்ரா காவல்நிலையத்திற்குத் தகவல் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து கோத்ரா காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று அந்த உடலை மீட்டு எடுத்துள்ளனர். பிறகு சிறுமி காணவில்லை எனப் புகார் கொடுத்த சிறுமியின் பெற்றோரை அழைத்து விசாரித்துள்ளனர். மேலும், மருத்துவப் பரிசோதனை மூலம், இறந்திருப்பது காணாமல் போன அந்தச் சிறுமிதான் எனத் தெரியவந்துள்ளது. 

 

Rajasthan Bhilwara girl child issue

 

தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், சிறுமியின் மீதி உடல் பாகங்கள் அருகே இருந்த குளத்தில் இருந்து போலீஸார் எடுத்துள்ளனர். இந்த விவகாரத்தில் கோத்ரா காவல்துறையினர் இதுவரை கலு லால்(25), கன்ஹா(21), சஞ்சை குமார்(20) மற்றும் பப்பு(35) ஆகிய  நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் ஒரு சிறுவன் ஈடுபட்டுள்ளதாகவும், அவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் குற்றத்தில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது. மேலும், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட 10 நபர்களில் நான்கு பேர் பெண்கள் எனும் அதிர்ச்சி தகவலையும் கைது செய்யப்பட்ட நான்கு பேர் தெரிவித்துள்ளனர். 

 

Rajasthan Bhilwara girl child issue
மாதிரி படம்  

 

கொலை செய்யப்பட்ட சிறுமியின் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்களைத் தடயவியல் துறையினர் ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவில், சிறுமி உயிரோடு இருந்தபோதே அந்த நிலக்கரி உலையில் போடப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு அந்த நிலக்கரி உலையில் போடப்பட்டு எரிக்கப்பட்டாரா எனும் விபரங்கள் தெரியவரும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

இந்தக் கொலைக் குற்றத்தில், சிறுமியின் பெற்றோர் கடந்த புதன்கிழமை கோத்ரா காவல்நிலையத்தை அணுகியபோது, உதவி காவல் ஆய்வாளர் முறையாகச் செயல்படவில்லை எனத் தெரியவந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்த உதவி காவல் ஆய்வாளரை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

இந்நிலையில், குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்கள் சிறுமியின் உடலைத் தகனம் செய்தனர். அப்போது சிறுமியின் தந்தை தானும் அந்தத் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தார். ஆனால் உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

 

14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் கேள்வி எழுப்பிய அம்மாநில எதிர்க்கட்சிகள், காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றஞ்சாட்டி வருகின்றனர். 

 

Rajasthan Bhilwara girl child issue

 

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த அந்த மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட், “பில்வாரா சம்பவத்தில் அன்று இரவே 4-5 குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காவல்துறை வேறு என்ன செய்ய வேண்டும். குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதில் மற்ற மாநிலங்களைவிட நாமே முதல் இடத்தில் உள்ளோம்” என்று தெரித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

பாஜகவை அதிரவைத்த இளைஞன்; தடம் மாறும் தேர்தல் களம் - யார் இந்த பாலைவன புயல்?

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
பாஜக மத்திய அமைச்சர் ரூபாலா

ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி 12 தொகுதிகளுக்கு முதற்கட்டத்தில் வாக்குப்பதிவும், மீதம் உள்ள 13 தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. இதில், ராஜஸ்தானின் பார்மர் தொகுதி தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தின் பெரிய தொகுதியான பார்மர் மக்களவைத் தொகுதியில் இந்த முறை பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சரான கைலாஷ் சௌத்ரி மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உமேதராம் போட்டியிடுகிறார். இப்படி, இருமுனை போட்டி தொடக்கத்தில் நிலவி வந்த நிலையில், பாஜக மத்திய அமைச்சர் ரூபாலாவின் சர்ச்சை பேச்சை களத்தையே புரட்டிப் போட்டுள்ளது. முன்னதாக கூட்டத்தில் பேசிய ரூபாலா, ராஜ்புத் சமூக ராஜாக்கள், பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்ததாக வார்த்தையை விட்டு அதன்பின் மன்னிப்பும் கேட்டார். ஆனால், ராஜ்புத் சமூக மக்களோ ரூபாலாவை நிறுத்தினால் நிச்சயம் தேர்தலில் பாஜகவிற்கு பதிலடி கொடுப்போம் என பிரம்மாண்ட கூட்டத்தை கூட்டி முடிவு எடுத்தனர்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan

அதன் பிறகும் பாஜக ரூபாலாவை திரும்பப் பெறவில்லை. இதனால், ராஜ்புத் சமூகமே பாஜகவின் மீது கொதித்துப் போய் உள்ளது. அதன் வெளிப்பாடே ராஜஸ்தானின் பார்மரின் தொகுதியில் 27 வயதான 'ரவீந்திர சிங் பதி தன்' சுயேட்சையாக போட்டியிடுகிறார். இரு தேசிய கட்சிகள் மோதும் களத்தில் ஒரு சுயேட்சை வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் அமோக ஆதரவு மக்கள் வழங்கியது தேசிய அளவில் கவனம் பெற்றது. இளம் வேட்பாளரான ரவீந்திர சிங் ராஜ்புத் சமூகத்தின் தலைவராக உள்ளார். பாஜகவின் மாணவர் அமைப்பில் உறுப்பினராக இருந்த ரவீந்திர சிங், தனது கல்லூரி காலத்தில் ஒரு முறை சுயேட்சையாக கல்லூரி தேர்தலில் போட்டியிட்டார்.

அப்போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அந்த முறை சுயேட்சையாக போட்டியிட்ட ரவீந்திர சிங் 57 வருட கல்லூரி தேர்தல் வரலாற்றை மாற்றி தலைவராக வெற்றிப் பெற்றார். அதன் பிறகு பாஜவில் இணைந்த ரவீந்திர சிங்கிற்கு கடந்த ராஜஸ்தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், மீண்டும் சுயேட்சையாக போட்டியிட்டே தனது 26 வயதில் சட்ட மன்றத்தில் நுழைந்தார்.

Ravindra Singh Pati Dhan  who will contest as an independent against the BJP in Rajasthan
ரவீந்திர சிங் பதி தன்'

இத்தகைய சூழலில் நாடு முழுவதும் பாஜகவின் வாக்கு வங்கியாக இருந்த ராஜ்புத் சமூகம், நடைபெரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு பாடம் புகட்ட முடிவு எடுத்த நிலையில், மீண்டும் சுயேட்சையாக பார்மரின் மக்களவையில் களம் இறங்கியுள்ளார். அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தேசிய வேட்பாளர்களுக்கு போட்டியாக கூட்டம் கூடியது. அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் ரவீந்திர சிங் பாஜகவிற்கு கடும் போட்டியாக இருப்பார் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பாலைவனப் புயல் என்று அவரது பகுதி மக்களால் அழைக்கப்படும் ரவீந்திர சிங் மக்களவைத் தேர்தலிலும் சுயேச்சை புயாலாக வீசுவார என்ற கேள்விக்கு ஜூன் 4தான் பதில் சொல்லும்.   

நாடு முழுக்க இந்தியா கூட்டணி - பாஜக கூட்டணி இடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.