Skip to main content

ரயில்வே தேர்வு: வட இந்தியர்கள் 100 க்கு 354 மதிப்பெண்கள் எடுத்து எப்படி..? ரயில்வே அமைச்சகம் விளக்கம்...

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

நாடு முழுவதும் ரயில்வே துறையில் 62, 907 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு குரூப் டி பிரிவில் எழுத்து தேர்வு நடைபெற்றது.

 

railway

 

கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக நடைபெற்ற இந்த தேர்வுகள் இந்தியா முழுவதும் 16 மண்டலங்களில் நடைபெற்றன. இதன் முடிவுகள் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகின. இந்த முடிவுகளில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக தமிழகத்தில் உள்ள பணி இடங்களுக்கு அதிகமான அளவு வட இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதிலும் 100 மதிப்பெண்களுக்கு 120, 354 மதிப்பெண்கள் என பெற்று அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தமிழக ரயில்வே வேலைகளுக்காக பிரத்தியேகமாக நடைபெறும் இந்த தேர்வில் தமிழகத்தை பற்றிய கேள்விகளே அதிகம் இருக்கும். அப்படி இருக்கும் போது எப்படி வடமாநிலத்தவர்கள் தமிழர்களை விட அதிகம் தேர்ச்சி பெற முடியும் என சர்ச்சை எழுந்தது.

அதிலும் மொத்த மதிப்பெண்களே 100 எனும்போது எப்படி 120, 354 என்று மதிப்பெண்கள் எடுக்க முடியும் என கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இதுகுறித்து தற்போது ரயில்வே அமைச்சகம் பதிலளித்துள்ளது.

அதில், நார்மலிசேசன் முறைப்படி மதிப்பெண் கணக்கிடப்படுவதால் மதிப்பெண்கள் இவ்வாறு வந்துள்ளன, அதை முறைகேடாக கருத வேண்டாம் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகள் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு வினாத்தாள்களை கொண்டதால், கடினமான மற்றும் எளிதான வினாத்தாள்களிடையே உள்ள வேறுபாட்டை நீக்க நார்மலிசேசன் முறை கடைபிடிக்கப்படுவதாகவும், 19 வருடங்களாக இதேமுறையை தான் பின்பற்றி வருவதாகவும் ரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் வடஇந்திய இவ்வளவு பேர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து ரயில்வே அமைச்சரகம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

பிப்.14 ல் ரயில் மறியல்:கூடிய அனைத்து கட்சி நிர்வாகிகள்

Published on 11/02/2024 | Edited on 11/02/2024
Rail strike on February 14: All party leaders present

சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 14- ல் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

கோவை-மயிலாடுதுறை ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். மைசூர்-மயிலாடுதுறை ரயில் சிதம்பரம் வரை நீட்டிக்க வேண்டும். செங்கோட்டை- தாம்பரம் ரயில் , சாரதா சேது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், காரைக்கால்-எழும்பூர் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய ரயில்கள் சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வலியுறுத்தி வருகிற பிப்.14ம் தேதி சிதம்பரம் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ் ஒளி தலைமை வகித்தார். கூட்டத்தில்  முன்னாள் எம்எல்ஏ அப்துல்நாசர், நகர் மன்ற துணைத் தலைவர் எம் முத்துக்குமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் சேரலாதன், நகர செயலாளர் குமார், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் பூ.சி. இளங்கோவன், இந்திய கம்யூ கட்சி மாவட்ட குழு உறுப்பினர் வி.எம்.சேகர், நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் தில்லை ஆர்.மக்கின், செயல் தலைவர் தில்லை கோ.குமார், மாவட்ட துணைத்தலைவர் ராஜா சம்பத்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் பால அறவாழி, கோ.நீதிவளவன், ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் அப்துல் ரியாஸ், நிர்வாகி வழக்கறிஞர் ஸ்ரீதர், நிர்வாக செயலாளர் ஜெ.கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டமிட்டபடி பிப்ரவரி 14 ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்பி தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவது, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் செல்ல மறுப்பது, சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இருதய சிகிச்சை நிபுணர் உள்ளிட்ட மருத்துவர்களை நியமிக்க வேண்டும், இதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட உயர் மருத்துவ சிகிச்சைகளை செயல்படுத்த வேண்டும்உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.