காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்றஉறுப்பினருமானராகுல் காந்தி தமிழ்நாட்டில் தொடங்கியஇந்திய ஒற்றுமை பயணத்தை சமீபத்தில் காஷ்மீரில் நிறைவு செய்தார்.இந்நிலையில் தனிப்பட்ட பயணமாகவும், கட்சி சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் காஷ்மீருக்கு ராகுல் காந்தி சென்று இருந்தார். அவரை தொடர்ந்துராகுல் காந்தியின்சகோதரி பிரியங்கா காந்தியும் நேற்று முன்தினம் காஷ்மீருக்கு சென்றார்.
இந்நிலையில், இருவரும் குல்மார்க் பனி மலை பனிப்பிரதேசத்தில் பனிக்கட்டி உள்ள பகுதிகளில் பயணிக்கும் ஸ்னோ ஸ்கூட்டர் எனப்படும் இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டி மகிழ்ந்தனர். இதில் பிரியங்காகாந்தி ஸ்கூட்டரைஓட்ட, ராகுல் காந்தி பின் இருக்கையில் அமர்ந்து பயணம்செய்தார். அப்போது இருவரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.
இந்த வீடியோவானது தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.