காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இயக்குநர் பா.ரஞ்சித் நேற்று டெல்லியில் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவருடன் நடிகர் கலையரசனும் உடன் இருந்துள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து இருவருடன் எடுத்த புகைப்படத்தையும் தனது டிவிட்டரில் பதிவிட்ட ராகுல் காந்தி, இந்த சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
ADVERTISEMENT
இதுகுறித்து, மேலும் ராகுல் காந்தி தனது டவிட்டர் பதிவில் கூறியதாவது,
த மிழில் மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித்தையும் அவருடன் நடிகர் கலையரசனையும் நேற்று டெல்லியில் சந்தித்தேன். அப்போது அரசியல், திரைப்படங்கள் மற்றும் சமுதாயம் குறித்து பேசினோம்.
இந்த கலந்துரையாடலால் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இதுபோன்ற உரையாடல்களை தொடர்ந்து எதிர்நோக்குவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Show comments