Skip to main content

"இது பேரழிவுகளை ஏற்படுத்தும்" - மோடிக்கு ராகுல் காந்தி கடிதம்!

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

rahul modi

 

இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட மாநிலங்கள், தடுப்பூசி பற்றாக்குறை இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வயதை 18 வயதுக்கு குறைக்க வேண்டும் எனவும் சில மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து பிரதமர் தலைமையிலான கூட்டத்திலும் நேற்று (08.04.2021) ஆலோசிக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் அக்கோரிக்கைகளை ஏற்க மறுத்தார்.

 

இந்தநிலையில் ராகுல் காந்தி, கரோனா தடுப்பூசி தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், கரோனா தடுப்பூசியை தேவையான அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும் சான்றிதழில், பிரதமர் மோடியின் படம் இடம்பெறுவதை மறைமுகமாக சாடியுள்ள அவர், நமது கரோனா தடுப்பூசி திட்டம், தடுப்பூசி சான்றிதழில் தனிநபர் புகைப்படம் இடம்பெறுவதை தாண்டி, அதிகமான தடுப்பூசி செலுத்தப்படுவதை உறுதிபடுத்தும் இடத்திற்கு நகர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

 

மேலும் ராகுல் காந்தி, "நமது விஞ்ஞான சமூகம் மற்றும் தடுப்பூசி தயாரிப்பாளர்களின் முயற்சிகள், மத்திய அரசின் தவறான நடைமுறைபடுத்தலாலும், அசட்டையான தன்மையாலும் குறைவாக மதிப்பிடப்படுகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. மூன்று மாதங்களில் ஒரு சதவீத மக்களுக்குத்தான் முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள்ளோம். தற்போதைய வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டால், நாட்டின் 75 சதவீத மக்களுக்குத் தடுப்பூசியை செலுத்தி முடிக்க சில வருடங்கள் ஆகும். அது பேரழிவுகளை ஏற்படுத்துவதோடு, இந்தியப் பொருளாதாரத்தின் வேகத்தைக் கடுமையாக குறைக்கும். நமது நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், மத்திய அரசு ஏன் பெரிய அளவில் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது என்பதற்கு தெளிவான காரணங்கள் இல்லை. 6 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் அவர், "மாநிலங்கள் தொடர்ந்து தடுப்பூசி பற்றாக்குறையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. அதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் இருந்து சுயகட்டுப்பாடு இல்லாத, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைக் குறிவைக்கும் பேச்சுகளே கிடைக்கின்றன. அது நீங்கள் அவசியம் என்று வலியுறுத்திய கூட்டுறவு கூட்டாட்சி முறையை நீக்குகிறது" என கூறியுள்ளார். கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு உடனடியாக தடைவிதிக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி, கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

Next Story

“ஒரு கட்சி அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்துவது இதுவே முதல்முறை” - ராகுல் காந்தி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rahul Gandhi says This is the first time a party has attacked the Constitution

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்தப் பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. மேலும், ஆளும் பா.ஜ.க.வும், காங்கிரஸும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தோல்வி பயத்தில் நடுங்கும் நரேந்திர மோடி. அதனால் தான் தொடர்ந்து பொய்களை ஒன்றன் பின் ஒன்றாக கூறி வருகிறார். நரேந்திர மோடி ஏழைகளின் தலைவர் அல்ல, கோடீஸ்வரர்களின் தலைவர் என்பதை இந்திய மக்கள் புரிந்துகொண்டுள்ளனர் என்பது அவர்களுக்குத் தெரியும். இந்திய மக்கள் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க எழுந்து நிற்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும்.

தேர்தல் அவர் கையை விட்டு நழுவியது அவருக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சி நேரடியாக அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் நடத்திய முதல் தேர்தல் இதுவாகும். நரேந்திர மோடி, 20-25 நபர்களுடன் சேர்ந்து, மக்களின் மிகப்பெரிய அதிகாரத்தை, அதாவது, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை அழிக்க விரும்புகிறார். அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல, அது ஏழைகளின் ஆயுதம், காங்கிரஸ் கட்சி இருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் இந்த ஆயுதத்தை மக்களிடமிருந்து பறிக்க முடியாது” எனப் பதிவிட்டுள்ளார்.