வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்யும் தேதி அறிவிப்பு...

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் பிரச்சாரங்களும் நாடு முழுவதும் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

rahul gandhi will file nomination on april 4 for wayanad constituency

இந்நிலையில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வரும் 4 ஆம் தேதி வயநாடு தொகுதியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் அன்று ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியும் அவர் உடன் வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

congress loksabha election2019 Rahul gandhi wayanad
இதையும் படியுங்கள்
Subscribe