rahul gandhi

Advertisment

இந்தியாவில் கரோனாபரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்குப்பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கரோனாதொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறி ஏற்பட்டதால் கரோனாபரிசோதனை செய்துகொண்ட அவருக்குகரோனாதொற்று ஏற்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைதனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளராகுல் காந்தி, சமீபத்தில் தன்னோடு தொடர்பில் இருந்தவர்களை, பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிக்குமாறும், பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.