Advertisment

”மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்” - ராஜீவ் காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்

rahul gandhi

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31ஆவது நினைவுதினத்தை காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் நாடு முழுவதும் இன்று அனுசரித்து வருகின்றனர். டெல்லியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு இன்று காலை வருகை தந்த சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அதேபோல காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அங்கு அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.

Advertisment

இந்த நிலையில், தன்னுடைய தந்தையின் மறைவுதினத்தை நினைவுகூரும் வகையில் ராகுல் காந்தி ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், ”என்னுடைய தந்தை தொலைநோக்கு சிந்தனையுடைய தலைவர். அவரது சிந்தனைகள் நவீன இந்தியாவை உருவாக்குவதில் துணைபுரிந்தன. அவர் மிகவும் இரக்கமுள்ள, கனிவான மனிதர். எனக்கும் பிரியங்காவுக்கும் சிறந்த தந்தையாக இருந்தார்.மன்னிப்பின் மகத்துவத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். அவருடன் நான் செலவழித்த நாட்களை அன்புடன் நினைவுகூருகிறேன்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe