Advertisment

“சந்திரசேகர் ராவ் படித்ததே காங்கிரஸ் கட்டிய பள்ளியில்தான்” - ராகுல் காந்தி

rahul gandhi critctized chandrasekhar rao in telangana

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 7 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று முடிந்தது. அதேபோல், மிசோரம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

Advertisment

அதன்படி, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத்தில் பாரத ராஷ்டிர சமிதி கட்சித் தலைவரான சந்திரசேகர் ராவ் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் பாரத ராஷ்டிர சமிதி என மும்முனை போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரசேகர் ராவ், காங்கிரஸ் கட்சியையும், பா.ஜ.க.வையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் இன்று (17-11-23) ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், “சந்திரசேகர் ராவ் ஒரு குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி செய்து வருகிறார். ஆனால், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களின் ஆட்சியை நாங்கள் விரும்புகிறோம். முதல்வர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனால், அவர் படித்ததே காங்கிரஸ் கட்டிய பள்ளியில் தான் என அவர் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

chandrasekarrao telangana
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe