ராகுல் காந்தி எங்கு சென்றாலும் பாஜக மீது ரஃபேல் போர் விமானம் வாங்கியது குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கிறார். அந்த போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ராகுல் பாஜகவை குற்றம் சாட்டிவருகிறார்.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து அருண் ஜெட்லீ கூறியிருப்பதாவது: ஜெய்பூரில் பேசிய ராகுல் காந்தி, முதலில் 520கோடி என்றார் அதே மேடையில் மீண்டும் 540கோடி என்றார். ஹைதிராபாத்தில் பேசும் போது புதிதாக 526கோடி என்று ரஃபேல் போர் விமானம் குறித்து பேசியுள்ளார். உண்மைக்குத்தான் ஒரு முகம், பொய்யுக்கு பலவகையான முகங்கள் இருக்கிறது. ரஃபேல் போர் விமானம் குறித்து வைக்கும் குற்றச்சாட்டிலிருந்து ரஃபேல் போர் விமானம் வாங்குவது பற்றியாவது அவர்களுக்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ ராகுல் காந்தி வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.