Advertisment

அயோத்தி தீர்ப்பு குறித்து ராகுல் காந்தி கருத்து...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

Advertisment

rahul gandhi about ayodhya verdict

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "அயோத்தி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை மதிப்பதோடு, பரஸ்பர நல்லிணக்கத்தையும் பேண வேண்டும். இது நாம் அனைவருக்கும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பினை பறைசாற்றும் காலமாக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Advertisment

Ayodhya babri masjid Ram mandir
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe