ராகுல் காந்தி மேல் அவதூறு வழக்கு....

rahul gandhi

மத்திய பிரதேசத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த மாநிலத்தில் இரண்டு நாள் பிரச்சாராத்தை மேற்கொண்டார். நேற்று பிரச்சாரத்தின்போது பேசிய ராகுல் காந்தி, இந்த மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகானின் மகனின் பெயர் பனாமா பேப்பர் வெளியிட்ட ஊழல் செய்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. ஆனால் அவரின் மீது எதாவது ஒரு நடவடிக்கை எடுக்கப்பட்டதா? பாகிஸ்தானில் பனாமா பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் பிரதமருக்கு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது என்று ஜாபுவா என்னும் இடத்தில் பேசினார்.

இந்நிலையில் இந்த பேச்சை கண்டித்து, சிவ்ராஜ் சௌகான் மகன் கார்த்திகே சவுகான் போபால் கோர்ட்டில், ராகுல் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்ந்ததை குறித்து பேசியுள்ள சிவ்ராஜ் சௌகான், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டால் மட்டுமே இந்த வழக்கு மறுபரிசீலனை செய்வோம் என்றார்.

Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe