வாக்களிப்பதன் அவசியத்தை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

rahman

Advertisment

பிரதமரின் இந்த கோரிக்கையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்றுக்கொண்டுள்ளார். வாக்காளர்களுக்கு அவர்களது வாக்குரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, பாடகர் லதா மங்கேஸ்கர், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஆகியோர் முன்வர வேண்டும் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்தார். இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில்மோடியின் கருத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில்பதிலளித்துள்ள ஏ.ஆர். ரகுமான். நிச்சயம் செய்வோம் என்றும் அழைப்புக்கு நன்றி என்றும் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.