நடந்துமுடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த சோரன் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் என்பவர் ஹேமந்த சோரனின் சாதியை குறிப்பிட்டு தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை அடுத்து ரகுபர் தாஸ் மீது ஜார்கண்ட் போலீஸார் வழக்குத் தொடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.