Advertisment

ரஃபேல் போர் விமானம் குறித்து ராகுல் தலைமையில் கூட்டம் 

rahul gandhi

Advertisment

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி வருகின்றனர். இந்த விஷயத்தை பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகிய நாடாளுமன்ற கூட்டங்களிலும் இதைப்பற்றி காங்கிரஸ் கட்சி பேசிவருகிறது.

தற்போது இதுகுறித்து டெல்லியில் இன்று மதியம் 3:30மணிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பொதுசெயலாளர், கட்சி பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் ஆகிய அனைவருடனும் கூட்டம் கூட்டி பேச இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

rafael Rahul gandhi
இதையும் படியுங்கள்
Subscribe