Skip to main content

ஆவணங்கள் வந்த பின் பாஜகவுக்கு இருக்கு-கபில் சிபல்...  

Published on 03/09/2018 | Edited on 03/09/2018
kabil sibal


ரஃபேல் போர் விமானங்களின் தேவை அதிகமாக இருக்கும் நிலையில், குறைவான விமானங்களை அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டிருப்பது ஏன்?, 126 போர் விமானங்கள் தேவை இருக்கிறது, இருந்தும் 36 விமானங்களுக்கே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது ஏன்?, ஒரு விமானத்திற்கு ரூ.526 கோடிக்கு பதிலாக ரூ.1670 கோடி கொடுப்பது ஏன்?, கொள்முதல் நியாயமாக நடந்தது எனில் கூட்டுக்குழு விசாரணைக்கு எதிர்ப்பு ஏன்? என்று காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ரஃபேல் போர் விமானம் குறித்து கேள்வி மேல் கேள்வி எழுப்பியுள்ளது.
 

இந்நிலையில், ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு இருக்கிறது என்பதை முழு ஆவணங்கள் கிடைத்தபின் நீதி மன்றத்தில் சட்டப்படி வழக்குத்தொடருவோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் கூறியுள்ளார்.    
      

சார்ந்த செய்திகள்