Skip to main content

ரஃபேல் விமானம் குறித்து காங்கிரஸ் கூட்டம் மாற்றம்..

Published on 17/08/2018 | Edited on 17/08/2018

 

rafael

 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்று சொல்லி வருகின்றனர். இந்த விஷயத்தை பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் மழைக்கால கூட்டத்தொடர் ஆகிய நாடாளுமன்ற கூட்டங்களிலும் இதைப்பற்றி காங்கிரஸ் கட்சி பேசிவருகிறது.

 

இதுகுறித்து டெல்லியில் இன்று மதியம் 3:30மணிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி பொதுசெயலாளர், கட்சி பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் ஆகிய அனைவருடனும் கூட்டம் கூட்டி பேச இருப்பதாக ராகுல் காந்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த நாளை நடைபெறும் என்று மாற்றப்பட்டதாக காங்கிரஸ் மேலிடம் தெரிவித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்