ADVERTISEMENT

வானொலியில் பிரபலமான சரோஜ் நாராயண ஸ்வாமி காலமானார்!

11:30 PM Aug 13, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


வானொலியில் ஒரு காலத்தில் அதிகாலையில் ஒலித்த செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி என்ற தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் மும்பையில் காலமானார். அவருக்கு வயது 87.

ADVERTISEMENT

லட்சக்கணக்கான தமிழர்கள் நாள்தோறும் வானொலியில் சரோஜ் நாராயண் ஸ்வாமியின் குரலைக் கேட்டு எழும் காலம் இருந்தது. அகில இந்திய வானொலி வாயிலாக பிரபலமான அவருக்கு ஒலிபரப்புத்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, கடந்த 2019- ஆம் ஆண்டில் தமிழக அரசு 'கலைமாமணி விருது' வழங்கி பெருமைப்படுத்தியது.

அகில இந்திய வானொலியில் தமிழ் செய்தி வாசிப்பாளராகப் பிரபலமான சரோஜ் நாராயண் ஸ்வாமி ஒலிபரப்புத்துறையின் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தார். 35 ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றி விடைபெற்ற பின்னர், தமிழ் படங்கள், திரைப்படங்கள் பிரிவின் ஆவணப்படங்கள் உள்ளிட்டவற்றிற்கு அவர், குரல் கொடுத்து வந்தார்.

அதிகமாக அறியப்பட்டு, அழியா புகழ் பெற்ற சரோஜ் நாராயண் ஸ்வாமியின் மறைவு வானொலி நேயர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT