ADVERTISEMENT

குவாட் தலைவர்கள் இன்று ஆலோசனை!

06:45 PM Mar 03, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உக்ரைனில் 8வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், குவாட் நாடுகளின் தலைவர்கள் காணொளி வாயிலாக இன்று (03/03/2022) ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கவிருக்கிறார்.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தியா இணைந்த அமைப்பு குவாட். உக்ரைனில் போர் நீடிக்கும் நிலையில், குவாட் நாடுகளின் தலைவர்கள் இன்று (03/03/2022) ஆலோசனை நடத்தவிருக்கின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ ஆகியோர் இந்தோ- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளன.

அப்போது உக்ரைன் விவகாரம் குறித்தும் தலைவர்கள் பேசுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் ரஷ்யா ஆக்ரோஷமான தாக்குதலை நடத்தி வரும் நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT