உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 31,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் உலக நாடுகள் பலவும் தங்கள் நாடுகளில் லாக் டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதனால் சாலைகளில் மனித நடமாட்டம் உலகம் முழுவதுமே குறைந்துள்ளது. காட்டில் மட்டுமே காணப்படும் சில விலங்குகள் ஐரோப்பிய நாடுகளில் தெருவில் சாதாரணமாக காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று முழு மானை உயிருடன் விழுங்குகிறது. மயிற்கூச்சரிக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Follow Us