Skip to main content

மானை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு... வைரலாகும் வீடியோ!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 31 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 31,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 


மேலும் உலக நாடுகள் பலவும் தங்கள் நாடுகளில் லாக் டவுனை நடைமுறைப்படுத்தியுள்ளன. இதனால் சாலைகளில் மனித நடமாட்டம் உலகம் முழுவதுமே குறைந்துள்ளது. காட்டில் மட்டுமே காணப்படும் சில விலங்குகள் ஐரோப்பிய நாடுகளில் தெருவில் சாதாரணமாக காண முடிகின்றது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோ ஒன்று காண்போரை அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் மலைப்பாம்பு ஒன்று முழு மானை உயிருடன் விழுங்குகிறது. மயிற்கூச்சரிக்கும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோழி கூண்டில் 15 அடி நீள மலைப்பாம்பு; அதிர்ச்சியில் உறைந்த உரிமையாளர்

Published on 22/10/2022 | Edited on 22/10/2022

 

 A 15-foot-long python in a chicken coop; The owner was shocked

 

கன்னியாகுமரியில் கோழி வளர்க்கும் கூண்டில் 15 அடி நீளம் மலை பாம்பு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், பூதப்பாண்டி அருகே பார்த்திபன் என்ற நபர் வீட்டின் முன்புறம் கூண்டு ஒன்றை அமைத்து அதில் கோழிகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் கோழிகளுக்கு உணவளிக்க கோழி கூண்டை எதேச்சையாக திறக்க வந்தபொழுது, உள்ளே மலைப்பாம்பு ஒன்று இருந்தது. அதனைக் கண்டு அதிர்ந்த அவர் இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் கூண்டைத் திறந்து உள்ளே இருந்த மலைப்பாம்பை வெளியே எடுத்தனர். சுமார் 15 அடி நீளம் கொண்ட அந்த மலைப்பாம்பை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

 

 

Next Story

பள்ளி பேருந்தில் மலைப்பாம்பு... அதிர்ச்சி வீடியோ

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

Python on school bus... Shocking video

 

சில சமயங்களில் பள்ளி மாணவர்களின் காலணிகளுக்குள் பாம்பு உள்ளிட்ட விஷ சந்துகள் பதுங்கி இருப்பது தொடர்பான வீடியோக்கள் வெளியாகிய அதிர்ச்சி ஏற்படுத்தும். அண்மையில் புத்தகப் பையில் நாகபாம்பு ஒன்று இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் தனியார் பள்ளி பேருந்தின் எஞ்சின் பேனட் பகுதியில் மலை பாம்பு ஒன்று இருந்த நிலையில் அது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உத்திரபிரதேசம் மாநிலம் ரெயிட்பெரேலியில் விடுமுறையை முன்னிட்டு தனியார் பள்ளி பேருந்து ஒன்று வெகுநாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் எஞ்சின் பேனட் பகுதியில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்தது. இது தொடர்பாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் கயிறைக் கட்டி மலைப்பாம்பை இழுத்து வெளியே கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.